24-oct விகடனில் 'கற்றதும் பெற்றதும்'
சுஜாதா அவர்களின் 'கற்றதும் பெற்றதும்' தொடர் கட்டுரைகளைப் படிக்கும்போது, அறிவுபூர்வமான மற்றும் சுவையான பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. திரு.சுஜாதாவுக்கு வயதானாலும் கூட, அவர் இளமையாக சிந்திப்பதனால் தான், அவரது எழுத்தில் நகைச்சுவை உணர்வு இன்றும் மிளிர்கிறது! சென்ற வார ஆனந்த விகடனில், அவரது கட்டுரையில், பல இடங்களில் இதைப் பார்க்க முடிகிறது. உதாரணங்களாக, சிலவற்றை எடுத்து தந்திருக்கிறேன்.
1. அவர் சென்றிருந்த அனஸ்தீஸியா பற்றிய விளக்கக் கூட்டத்தில், தனக்கு 'மயக்க மருந்துகளைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் கிடைத்தது' என்கிறார்! கூறி விட்டு, 'எப்படி சிலேடை?' என வினவுகிறார். நான் என்னவோ இத்தனை காலம், " பெருங்காயம், பருகாத-தேன், என்-பேனா, மறுப்போர்" வகைப்பட்ட சொற்கள் மட்டுமே சிலேடை என எண்ணியிருந்தேன்!
2. அடுத்து, லேட்டஸ்ட்டாக வந்திருக்கிற PROPOFOL எடுத்துக் கொள்ளும்போது (அறுவை சிகிச்சையின் போது தான்!) நமக்கு " 'அய்யோ மிய்யோ' இருக்காதாம்" என்கிறார்! 'அய்யோ மிய்யோ' என்றால் என்ன என்பதை திரு.சுஜாதாவிடம் திரு.தேசிகன் கேட்டுக் கூறினால், அவருக்கு புண்ணியமாகப் போகும்!
3. ANAESTHETIST-ஐ 'மயக்குநர்' என்கிறார்! அதாவது, ஒரு ஆபரேஷனுக்கு, மருத்துவரும் தேவை, மயக்குநரும் அவசியம்.
4. தான் சென்றிருந்த ஒரு கிறித்துவக் குடமுழுக்கு விழாவை, "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் துணை புதிய பிறவிக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று 'ஆஸ்ஸீர்வதிக்கும்' விழா" என்று கூறுகிறார்! Subtle Humour!
5. எளிமையான தமிழ்ச் செய்யுட்களுக்குக் கூட அர்த்தம் புரியாதோரை, 'SMS தமிழர்கள்' என்கிறார்!
6. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது,
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே!"
என்ற கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அவர் வழங்கும் 'சென்னைத்தமிழ்' பொழிப்புரையான
"நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே" என்பது தான்!!!
Deadly Translation Sir!
அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
2 மறுமொழிகள்:
Hi balaji!
I haven't started blogging yet. i had registered my blogspot a couple of months ago. anyhow thanks for asking..
Doing nice blogging balaji. when i read about the songs, it took me another place in time, when we used to sit around radio and listen to ceylon radio.
Keshav
தல, உன் ப்ளாக்கிங் செம குஜாலாகீது பா!!!
-பிரபு
Post a Comment